செவ்வாய், 4 மார்ச், 2014

தமிழர்கள் இனவெறியர்களா ?




இன்றைய தமிழ் இந்து பத்திரிக்கை பதிப்பில் தோழர் சமஸ்  தமிழகத்தின் ஏழு மண்டேலாக்கள் தலைப்பில் எழுதிய கட்டுரை தமிழர்களை இன வெறியர்கள் என்று சுட்டி காட்டுவதால் அதற்கு மறுப்பு தெரிவிக்கவே இந்த கட்டுரை தோழர் சம்ஸ் எழுதிய கட்டுரை படிக்க (அதன் லிங்) http://tamil.thehindu.com/opinion/columns/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%B4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/article5747725.ece

ராஜீவ் கொலை குற்றவாளிகள் என்று அரசால் குற்றம் சாட்ட பட்ட தமிழர்கள் ஆன சாந்தன், முருகன், பேரறிவாளன், நளினி, ராபர்ட் ஃபயஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் தமிழகத்தின் ஏழு மண்டேலாக்கள் என்று சென்னை, ராஜாஅண்ணாமலைபுரத்தின் நீண்ட சுவர்களில் ஒட்டப்பட்டிருக்கும் சுவரொட்டிகள் மூலம்  தாம் அறிந்து கொண்டதாகவும் ஆனால் அவர்கள் கொலை குற்றவாளிகள் என்றும் இப்போது மன்னிப்பு வேண்டி மனிதாபிமான அடிப்படையில்  சிறை விட்டு வெளிவர காத்து இருப்பதாகவும் இங்கு தமிழ் நாட்டில் போராடும்  சிலர் அவர்களை போற்றி நோட்டிஸ் அடித்து இருப்பதாகவும் அவர்கள் பல்வேறு வன்முறை சம்பவத்தில் ஈடு படுவதால் தான் வடக்கே ஊடக துறையில் இருப்பவர்கள் எல்லாம் நமை இன வெறியர்கள் என்று குறிக்கிறார்கள் என்ற கருத்தில் எழுதி இருக்கிறார் 



தோழர் சம்ஸ்க்கு தெரியாதது அல்ல ராஜீவ் கொலை வழக்கை விசாரணனை செய்து  வாக்குமூலம் எடுத்த அன்றய அதிகாரிகளின் இன்றய தன் வாக்குமூலம்: தொடக்கத்தில் பேரறிவாளன் மீது சுமத்தப்பட்ட குற்றங்களில் ஒன்று, அவர் ‘பெல்ட் பாம்’ தயாரிப்பில் உதவினார் என்பது. ஆனால், “‘பெல்ட் பாம்’ செய்தது யார் என்று தெரியவில்லை” என்று சமீபத்தில் சொன்னார், விசாரணை அதிகாரி ரகோத்தமன். “ராஜீவ் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள், ஏற்கெனவே தண்டனை அனுபவித்து விட்டார்கள்; அவர்களது மரண தண்டனையை ரத்துசெய்து விடுதலை செய்ய வேண்டும்” என்று அடுத்து வேண்டுகோள் விடுத்தார், பேரறிவாளன் உள்ளிட்ட நால்வருக்குத் தூக்கு தண்டனையை உறுதிசெய்து தீர்ப்பு எழுதிய உச்ச நீதிமன்ற நீதிபதி கே.டி.தாமஸ். இப்போது “பேரறிவாளனின் ஒப்புதல் வாக்குமூலத்தை முழுமையாகப் பதிவுசெய்யவில்லை; அவருக்கு ராஜீவ் கொலைபற்றித் தெரிந்திருக்க வாய்ப்பில்லை” என்று, தான் நம்புவதாகச் சொல்லியிருக்கிறார் பேரறிவாளனின் வாக்குமூலத்தைப் பதிவுசெய்த ஓய்வுபெற்ற ஐ.பி.எஸ். அதிகாரி தியாகராஜன்.



ராஜீவ் காந்தி கொலை வழக்கில் நளினியின் சார்பாக வழக்காடிய, 1970 முதல் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றி வரும், 69 வயதாகும்,திரு  எஸ்.துரைசாமி அவர்கள் எழுதி, விரைவில்  வெளிவரவிருக்கும் ஒரு புத்தகம் கேள்விகள் எதற்கும் பதில் இல்லை இன்றுவரை 

ராஜீவ் காந்தி மே 21ந்தேதி ஸ்ரீபெரும்புதூரில் திருமதி மரகதம் சந்திரசேகரை ஆதரித்து பிரச்சாரம் செய்வது என்கிற விஷயம் மே 18ந்தேதி தான் டெல்லியில் காங்கிரஸ் கட்சி கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. ஆனால் மே 17ந்தேதியே “தினத்தந்தி” செய்தித்தாளில்
ராஜீவ் காந்தி 21ந்தேதி ஸ்ரீபெரும்புதூர் கூட்டத்தில் பேசப்போகிறார் என்கிற செய்தி வெளி வந்து விட்டது – எப்படி ? தமிழ்நாட்டில் காங்கிரஸ் தலைவர்களுக்கே தெரியாத விஷயம்
தினத்தந்தி நிருபருக்கு தெரிந்தது எப்படி ?
19ந்தேதி விஷயம் தெரிந்த பிறகு, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் வாழப்பாடி ராமமூர்த்தி இந்த கூட்டம் கூடாது என்று ஆட்சேபித்திருக்கிறார்.அதையும் மீறி, மரகதம் சந்திரசேகரின் செல்வாக்கில் இந்த கூட்டம் நடத்தப்பட வேண்டும் என்று  உயர்மட்டத்தில்  தீர்மானிக்கப்பட்டது. அதன் பிறகு  உள்ளூர் காங்கிரஸ் பிரமுகர்கள் இந்த கூட்டத்தை ஸ்ரீபெரும்புதூர் உயர்நிலைப்பள்ளி மைதானத்தில் நடத்த போலீசிடம் அனுமதிவாங்கினார்கள்.  ஆனால் மரகதம் சந்திரசேகர்இந்த கூட்டம் நடைபெறும் இடத்தை பள்ளிக்கூடத்திற்கு பதிலாக, கோவில் மைதானம் என்று மாற்றி விட்டார்-அது ஏனோ ?இடம் மாற்றப்பட்ட விஷயம் போலீசிடம் சொல்லி புதிதாய் அனுமதி பெறப்படவில்லை. அந்த மைதானத்திற்கு சரியான பாதுகாப்பும்  போடப்படவில்லை.அந்த கூட்டத்தில்  டெரில் பீட்டர் என்கிற பிஸினஸ்மேன் ஒருவரும் வெடிவிபத்தில் சிக்கி இறந்து போனார்.அந்த ஆள் உண்மையில் எப்படி, ஏன் அங்கு வந்தார் ?அவர் மே 30தேதி அமெரிக்கா போவதற்காக அவரதுபெயரில் விமான டிக்கெட் எடுக்கப்பட்டிருந்தது.
அவரது மனைவி மத்திய பொதுப்பணித் துறையில் பணி புரிந்து கொண்டிருந்தார். இந்த சம்பவத்திற்குப்  பிறகு அவர் அமெரிக்கா போய் செட்டில் ஆகி விட்டார் !இந்த சம்பவத்தில் அவர் எந்த அளவிற்கு, எப்படி சம்பந்தப்பட்டிருந்தார் ?அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி, விசாரணையில்சரியாக ஒத்துழைக்கவில்லை. ஒரிஜினல் டூர் ப்ரொக்ராமை அவர்கள் விசாரணையின்போது கொடுக்கவே இல்லை. பின்னர் திரும்ப திரும்ப நினைவூட்டப்பட்டபிறகு நவம்பர் 28ந்தேதி - 6 மாதங்கள் கழித்து தான் -அதுவும் திருத்தப்பட்டதைத் தான் கொடுத்தார்கள் அது ஏன் ?
தனுவுடன் பக்கத்தில் ராஜீவுக்கு மாலை போடுபவர்க்ளுடன் நின்றிருந்த லதா கண்ணனின் கணவர் கண்ணன் 4வது கிரேடில் பணிபுரியும் ஒரு சாதாரண தொழிலாளி. கொலை நடந்த சில மாதங்களுக்குப் பின்னர் அவர்  சொந்தமாக ஒரு லாரி வாங்கினார். அவருக்கு அவ்வளவுபணம் கிடைத்தது எப்படி ? இதை விசாரிக்காமல் விட்டது எப்படி ?டிஐஜி ஸ்ரீகுமார் விசாரணைக்காக லண்டன் சென்றுவந்தார். அவர் அங்கு விசாரணையில் கண்டுபிடித்ததுஎன்ன என்று ரிப்போர்ட் எதுவும் கொடுக்கவில்லை.அவர் விசாரணைக்கு அழைக்கப்படவும் இல்லை.அவர் லண்டனில் இருந்தபோது முக்கியமான ஆவணங்கள்அடங்கிய ஒரு சூட்கேஸ் காணாமல் போனது. ஆனால் -இது தொடர்பாக நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை !
ஐபி டைரக்டர் எம்.கே.நாராயணன் அந்த நிகழ்ச்சியின் போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று தம்மிடம் இருப்பதாக கேபினட் செயலாளருக்கு எழுதி இருக்கிறார். ஆனால் -
இந்த வீடியோ – ஆவணமாக கோர்ட்டில் சேர்க்கப்படவில்லை.எஸ் ஐ டி கஸ்டடியில்  இருந்தபோது, ஷண்முகம் என்கிறசிறுவகைக் குற்றவாளி மர்மமான முறையில் இறந்தார்.அதற்கான காரணங்கள் இன்னும் வெளி வரவில்லை. மரகதம் சந்திரசேகரின் மகன் லலித் சந்திரசேகருக்கு ஸ்ரீபெரும்புதூர் கூட்டத்தை ஏற்பாடு செய்வதற்காக, தான் ஐந்து லட்சம் ரூபாய் கொடுத்ததாக சிவராஜன்தன் டைரியில் எழுதி வைத்துள்ளார்.இந்த தகவலை,திரு ரகோத்தமன் (ராஜீவ் கொலை வழக்கை விசாரித்த்முக்கிய சிபிஐ விசாரணை அதிகாரி)அண்மையில் வெளியிடப்பட்ட தன் புத்தகத்தில் எழுதி இருக்கிறார். ஆனால், கொலை வழக்கு விசாரணை நடந்தபோது, கோர்ட்டில் அவர் இந்த விவரத்தை தெரிவிக்கவில்லை.சிவராஜனின் டைரியையும் ஆவணமாக ஒப்படைக்கவில்லை !
சிவராஜன் லலித்திற்கு ஐந்து லட்சம் ரூபாய் கொடுததன்பின்னணியைப் பற்றி, சிபிஐ விசாரிக்காதது ஏன் ? தனுவும், சிவராஜனும் மரகதம் சந்திரசேகர்குடும்பத்திற்கு எப்படி அறிமுகம் ஆனார்கள் என்பதைசிபிஐ எங்கும் தெரிவிக்கவில்லை. இத்தனைக்கும்
லலித் சந்திரசேகரின் மனைவி ஒரு இலங்கைத் தமிழர் வேறு !
சிவராஜனின் டைரியில் ராஜீவ் காந்தி விசாகப்பட்டினத்திலிருந்து கிளம்பும் நேரமும், சென்னை
வந்து சேரும் நேரமும் குறித்து வைக்கப்பட்டிருக்கிறது.பின்னர், விசாகப்பட்டினத்தில் ராஜீவ் விமானம் யந்திரக் கோளாறு காரணமாக புறப்படத் தாமதம் ஆன விஷயம் கூட சென்னையில் இருந்த சிவராஜனுக்கு யாராலோ தெரிவிக்கப்பட்டிருக்கிறது.முதலில் இருந்தே கண்ணுக்குத் தெரியாத “கை” ஒன்று இதில் தொடர்பு கொண்டு இருக்கிறது.
எஸ் ஐ டி இந்த கோணங்களில் விசாரிக்காதது ஏன் ?சிவராஜனின் டைரிகளில் ஒன்றில் – சிவராஜன் போபாலுக்குச்(மத்திய பிரதேசம்) சென்றதும், TAGக்கு ஒரு கோடியே எழுபத்திஆறு லட்சம் ரூபாய் கொடுத்ததும் 13 மார்ச் 1991 தேதியிட்டு எழுதப்பட்டுஉள்ளது. இநத TAG யார் என்றும் எதற்காக இந்த பணப்பரிமாற்றம் நடந்தது என்றும் எஸ் ஐ டி தீவிரமாகவிசாரிக்கவில்லை.  இதைத் தீவிரமாக விசாரித்திருந்தால், உண்மையான குற்றவாளிகளின்முகம் தெரிய வந்திருக்கும்.
இந்த பணம் செக்காக கொடுக்கப்படவில்லை. மொத்த பணமும் ரொக்கமாக கொடுக்கப்பட்டிருக்கிறது. மார்ச் 8, 1991 தேதியிட்ட டைரி குறிப்பு - இது குறித்து மத்திய பிரதேசம், குணா மாவட்டத்தில்உள்ள ஒரு விலாசத்தையும் கொண்டிருக்கிறது.ராஜீவ் கொலை வழக்கில் குற்றவாளிகளில் ஒருவராக சிறையில் வைக்கப்பட்டிருந்த ஆதிரை என்கிற பெண் செப்டம்பர் 25, 1992 அன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் ராஜீவ் கொலை வழக்கு சம்பந்தமாக தான் சில விவரங்கள் கூற விரும்புவதாகத் தெரிவித்திருந்தார்.அதை  யாரும் சீரியஸாக எடுத்துக் கொள்ளவே இல்லை. மேலும், ஜூலை 29ந்தேதியன்று, பங்களூர் போலீஸ்,சிவராஜனும் அவரது கூட்டாளிகளும், இந்திரா நகரில் ஒரு வீட்டில் தங்கி இருக்கிறார்கள் என்கிற தகவலை எஸ்.ஐ.டி க்கு தெரிவித்தது. அன்றே அந்த வீட்டைகமாண்டோ படை வளைத்திருந்தால், சிவராஜன் உட்ப்டஅத்தனை பேரையும் உயிருடன் பிடித்திருக்கலாம்.ஆனால் எஸ்.ஐ.டி. இதற்கு 4 நாட்கள் எடுத்துக் கொண்டது. விளைவு – யாரும் உயிருடன் சிக்கவில்லை.சிவராஜன் உடல் கிடந்த இடத்தில், ஒரு  AK-47ரைபிளும், ஒரு 9mm பிஸ்டலும் இருந்தது. அவை எப்படி அங்கே வந்தன என்பதற்கு இன்று வரை சரியானவிளக்கம் இல்லை.வெடிவிபத்து நிகழ்ந்த இடத்திலிருந்து, ஹரிபாபுவின்காமிராவை போலீஸ் கைப்பற்றி இருந்தது. அதிலிருந்த பிலிம் சுருளை 5 மணி நேரத்திற்குள்ளாக ப்ராசஸ்செய்து புகைப்படங்களை எடுத்திருக்கலாம்.குற்றவாளிகளின் புகைப்படங்கள் கிடைத்து, தேடுதலைதுவக்கி இருக்கலாம். அது நடக்கவில்லை.

ஆனால் – இந்த புகைப்படங்கள் 25ந்தேதி திடீரென்று “இந்து” பத்திரிகையில் வெளிவந்தன. போலீஸ் வசம் இருந்த பிலிம் சுருளின் புகைப்படங்கள்இந்து பத்திரிகைக்கு கிடைத்தது எப்படி ? இதை யாரும் விசாரிக்கவில்லை.சம்பவம் நடந்த இடத்தில் 3 வீடியோபுகைப்படக்காரர்கள் எடுத்த வீடியோக்கள் சிதைக்கப்பட்டும்,சில் இடங்களில் அழிக்கப்பட்டும் இருந்தன.அவற்றை கையாளும்போது தவறுதலாக இவை நிகழ்ந்து விட்டன என்று போலீஸ் தரப்பு பின்னர் கூறியகாரணங்கள்  ஏற்றுக் கொள்ளக்கூடியதாக இல்லை.சுப்பிரமணிய சாமி ,சந்திரா சாமி இவர்கள் ராஜீவ் கொலையில் பங்கு விசாரிக்க படவே இல்லை 

தவறுகள்  செய்தவர்களை கண்டு பிடித்து தண்டிக்க முடியாமல் அப்பாவி ஏழு தமிழர்களை கொலை கயிற்றின் வாயிலில் 24 ஆண்டுகள் தவிக்க விட்ட பிறகும் அவர்கள் விடுதலை வேண்டி போராடுகிற சக தமிழனை இனவெறியர்கள் என்று சொல்வது மிக பெரிய அயோக்கியத்தனம் .ஆந்திரத்தில் ராஜீவ் சிலை தகர்த்த போது எழுதி இருந்தீர்களா? ஆந்திரன் இனவெறியன் என்று அப்படி ஆந்திரத்தில் எழுதி விட்டு அங்கு பிழைக்க முடியாது என்பது நீங்களும் நாங்களும் அறிந்தது தான் ,அனால் தமிழன் அப்படி இல்லை இந்த இனத்தை என்ன செய்தாலும் அமைதியாக தான் இருப்பான் ,எம்  இனம் தமிழ் ஈழத்தில் அழிக்க பட்ட போது  இந்த தேசம் அதற்கு உடந்தை ஆக இருந்த போதும் கண்ணீரை தவிர வேறு எதுவும் பெரிதாக செய்து விட வில்லை தமிழன் .என் அண்ணன் முத்து குமரன் தன் உயிரை கொடுத்து இந்த இனத்தின் உணர்ச்சி மீது கேள்வி கேட்டதும் என் அக்கா செங்கொடி எரி நெருப்புக்கு தன் உயிர் கொடுத்து இந்த இனத்தை போரடிய தூண்டிய பின் தான் பெரிய அளவில் போராட்டத்தில் ஈடு பட்டான் தமிழன் ,தன் இனம் அழிக்க இந்த தேசம் உடந்தை ஆக இருந்த போதும் இந்த தேசம் தேவை இல்லை என்பதை கூட தமிழன் ஒத்து கொள்ள மாட்டான் ,ஏன் என்றால் ஒருமைப்பாடு பெரிது என்று எண்ணுபவன் தான் தமிழன், அப்படி பட்ட தமிழனை நீங்கள் இனவெறியர்கள் என்று எழுதி அதுவும் தமிழ் நாட்டில் விற்கிறீர்கள் என்றால் தமிழன் எவளவு பொறுமை வாய்ந்தவன் என்பதற்கு இதை விட வேறு செயலை சொல்லி விட முடியுமா என்ன ?


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக