புதன், 23 ஏப்ரல், 2014

மாற்றத்தின் திறவுகோல்


இன்று உலக புத்தக தினம். ஏழை விவசாய தொழிலாளி மகன் ஆக பிறந்த சேக்சுபியர் படிப்பின் மீது ஆர்வம் இருந்தாலும் வறுமை காரணம் ஆக  முறையான கல்வி கற்க முடியாமல் பள்ளியில் இருந்து நிறுத்த பட்டார் .ஆனால்  அவர் தாம் வாழ்ந்த 52 வருடத்தில் 38 நாடகங்களையும் 154 வசன கவிதைகளையும் உலக இலக்கியத்துக்கு கொடுத்துள்ளார் .இது மிக பெரும் சாதனை  அவரின் இயற்கை எய்த நாள் ஆனா 23 ஏப்ரல் உலக புத்தக தினம் ஆக கொண்டாடபடுகிறது 



மனிதனின் ஆக சிறந்த கண்டுபிடிப்பு புத்தகம் தான் ,வரலாற்றை மாற்றியதில் புத்தகங்களுக்கு இருக்கும் பங்கை யாராலும் மறுக்க முடியா .ஒரு நல்ல புத்தகம் மிக சிறந்த நண்பன் .மிக கடினமான நேரங்களில் நமது மனதை சரி படுத்த புத்கம் வாசிப்பது மிக சிரப்பானது.நாம் வாழும் இந்த வாழ்கையில் சக மனிதர்கள் பற்றி அறிந்து கொள்ள ,சக மனிதனை நேசிக்க நமது வாழ்வை சரி படுத்த புத்தக வாசிப்பு மிக முக்கியம். 

ஒரு புத்தகத்தை நாம் வாசிக்கும் போது நமது கற்பனை வளம் கூடி நம் சிந்திக்கும் ஆற்றல் அதிகரிக்கிறது .நமக்கு புதிய அனுபவம் ஓவ்வொரு புத்தகம் படிக்கும் போதும் ஏற்படுகிறது .புத்தகம் இல்லாமல் என்னால் வாழவே முடியா .மிக சிக்கலான தருணங்களில் உற்ற தோழர் போல் உடன் வந்துள்ளது .கண் இருப்பதே புத்தகம் படிக்க தானே .


இதுவரை புத்தகம் வாசிக்கும் பழக்கம் இல்லாவிட்டாலும் இனியாவது தொடங்கலாம் தோழமைகளே .அருகில் இருக்கும் புத்தக கடைக்கு சென்று இன்றே புத்தகம் வாங்கி வாசிக்கும் பழக்கம் ஆரம்பியுங்கள் .புத்தகத்தையும் காற்றை போல் சுவாசிப்போம் .


உலகை மாற்றிய  அறிவாளிகளின்  புத்தகம் மீதான காதல் :

எங்கே தங்க விரும்புகிறீர்கள் என்று லண்டன் தோழர்கள் கேட்ட போது எந்த விடுதி நூலகம் அருகில் உள்ளதோ அங்கே என்றாறாம் 
                                                     .டாக்டர் அம்பேத்கர் 

நான் ஒரு போராளி உடன் பேசி கொண்டு இருக்கிறேன் முடித்து விட்டு வருகிறேன் அதன் பின் தூக்கில் இடுங்கள் என்றார் .
                                                         பகத்சிங்  

ஓவ்வொரு படம் நடிக்கும் முன் நூறு டாலருக்கு புத்தகம் வாங்கும் பழக்கம் உள்ளவர் 
                                                       சார்லி சாப்ளின் 

எங்கே நல்ல புத்தகம் எரிக்க படுகிறதோ அங்கே விரைவில் மனிதர்களும்  எரிக்க படுவர்  என்றார் 
                                                       சேகுவேரா 

ஒரு புத்தகம் திறக்க படும் போது உலகை நோக்கிய சன்லை திறக்கிறோம் என்றார் 

                                                   சிந்தனை சிற்பி சிங்காரவேலர் 

உலகின் தலைசிறந்த புத்தகத்தை உங்களிடம் இருந்து திருடி செல்பவர் உங்கள் நண்பர்கள் தான் என்றார் 
                                                 வால்டேர் 

ஒரு கோடி கிடைத்தால் நூலகம் அமைப்பேன் என்றார் 
                                                 காந்தி 

தனிமை தீவில் தள்ள பட்டால் புத்தகம் உடன் மகிழ்வாக காலம் கழிப்பேன் என்றார் 
                                                 நேரு 

இங்கு ஒரு புத்தக புழு உறங்குகிறது என்று தனது கல்லறையில் எழுத சொன்னவர் 
                                       பெட்ரண்ட்ரஸல்  

மனிதனின் ஆக சிறந்த கண்டு பிடிப்பு புத்கம்  என்றார் 
                                   ஆல்பர்ட் அய்ன்ஸ்டீன்  

பெண்களிடம் கரண்டியை பிடுங்கி விட்டு புத்தகம் கொடுங்கள் என்றார் 
                                  பெரியார் 

உண்ணாவிரதம் இருந்து சிறையில் புத்தகம் வாசிக்கும் அனுமதி பெற்றவர் 
                                  நெல்சன் மண்டேலா 

புத்தகமே பயங்கர போரட்ட ஆயுதம் என்றார் 
                               மார்டின் லூதர்கிங் 

புத்தகம் ஏற்படுத்திய தாக்கத்தை வெளியில் தேடுங்கள் என்றார் 
                                     எங்கெல்ஸ் 

ஒரு நாட்டின் சந்ததியினர் தேடி அடைய வேண்டிய செல்வம் புத்தகம் 
                                 கென்றி தோரா 



வாழ்வோம் புத்தகங்கள் உடன் மகிழ்வாக 

வியாழன், 17 ஏப்ரல், 2014

மதமும் இந்த தேசத்தின் மக்களும்



இன்று தமிழ் ஹிந்து பத்திரிக்கையில் நீதி மற்றும் அமைதிக்கான அமைப்பில் செயல் படும் டீஸ்டா  செடல்வாட் அவர்களின் நேர்காணல் படித்தேன் .இந்த தேசத்தில் மத கலவரம் நிகழ்த்தியவர்களுக்கு தண்டனை கிடைக்க வில்லை இதுவரை என்று வேதனை உடன் குறுப்பிட்டு இருந்தார் ,மனிதத்தின் ஆதரசுருதியான நீதியை காக்கும் முயற்சியில் தொடந்து பாடு பட்டு வருகிறார் .மத அடிப்படைவாதிகளிடம் இருந்து தொடர்ந்து மிரட்டல் வந்து கொண்டே இருக்கிறது ,இருப்பினும் சமூக அமைதி மற்றும் நீதிகான போரட்டம் தொடர்ந்து  நடத்தி கொண்டு வருகிறார் .


இந்த தேசத்தின் முதல் மத கலவரத்தை ஆங்கிலேயர்கள் இந்தியா பாகிஸ்தான் என்று பிரித்து ஆரம்பித்து வைத்தனர் .அந்த கலவரத்தில் கொல்ல பட்ட மக்கள் எராளம் .வன்புணர பட்டு வீச பட்ட பெண்களும் ரயிலில் கொன்று அனுப்ப பட்ட மக்களும் ஏரளாம். வன் புணரபட்ட பெண்களை ஏற்று கொள்ள கூட இந்த சமூகம்  தயார் இல்லை.பெண்கள் கதரும் போதும் துடிக்க துடிக்க வெட்ட படும் போதும் கதறிய கதறல் மட்டும் இந்த உலகத்தை படைத்தான் என்று இந்த தேசத்தின் மிக பெரும்பான்மை மக்கள் நம்பும் செவிட்டு கடவுளுக்கு கேட்கவே இல்லை அது ஏன் என்று தெரியவுமில்லை கல்லுக்கும் இல்லாத ஒருவனுக்கும் எப்படி கேட்கும் ? இந்த தேசத்தின் தந்தை என்று போற்ற படும் காந்தி நான் ஒரு இந்து ,நான் ஒரு முஸ்லிம் ,நான் ஒரு கிறிஸ்தவன் ,நான் ஒரு சீக் நான் எல்லா மதமும் ஆனவன் என்று சொன்னார் ,ஏன் என்றால் அவர் எல்லா மத நூல்களையும் அறிவுபெருமக்கள் மதம் குறித்து எழுதிய பல்வேறு நூல்களை உள்வாங்கி படித்து இருந்தார் ,அவருக்கு முன்னும் பின்னும் இந்த தேசத்தில் எவருமே எல்லா மதமும் எனக்கு ஒன்றே என்று எண்ணியதில்லை ,செயல்பட்டதில்லை .காந்தி மதம் அரசியலில் ஒரு காலம் கலக்க கூடாது மதம் என்பது தனி மனித விடயம் ,நான் சர்வாதிகாரி ஆக இருந்தால் இரண்டுக்கும் இடையே கோடு கிழித்து பிரித்து வைப்பேன் என்றார் ,காந்திக்கு தெரியவில்லை இந்த தேசம் மதவெறியர்களின் தேசம் என்று .அந்த மத வெறிக்கே அவர் உயிரும் பறிக்க பட்டது என்பதே வரலாறு .

அதற்கு பின்னும் மத கலவரம் இன்று வரை நடை பெற்று கொண்டு தான் இருக்கிறது ,ஆனாலும் மக்களில்  மத அடிப்படை வாதிகள் அதிகம் ஆகி கொண்டே இருக்கிறார்கள் .சில கலவரம் பட்டியல் 
  • குஜராத் வன்முறை 2002
  • கோத்ரா தொடருந்து எரிப்பு 
  • பாபர் மசூதி இடிப்பு 
  • பாகல்பூர் கலவரம் 
  • முசாபர் நகர் கலவரம் 
  • மொராதபாத் கலவரம் 
  • மும்பாய் கலவரம் 
  • மண்டைகாடு கலவரம்  இன்னும் பல 

இன்று வரை நடந்த எந்த கலவரத்திலும் குற்ற செய்தவர்கள் தண்டிக்க பட வில்லை .சுதந்திரம் பெற்ற பிறகு கலவரம் மூலம்  அதிக உயிர்  இழப்பு ஏற்படுத்திய ஆண்டும் இடமும் ஆட்சி செய்தவர்களும்   


எண்வருடம்இடம்உயிரிழப்புஆண்ட கட்சிமுதலமைச்சர்
11967ஹாதியா ராஞ்சி183ஜன கிராந்தி தளம்எம்.பி.சின்ஹா
21969அகமதாபாத்512காங்கிரஸ்ஹிதேந்திரகே தேசாய்
31970ஜல் காவ்100காங்கிரஸ்வசந்தராவ் நாயக்
41979ஜம்ஷேட்பூர்120ஜனதா கட்சிகர்பூரி தாகூர்
51980மொராதாபாத்1500காங்கிரஸ்வி.பி.சிங்.
61983நெலே, அஸ்ஸாம்1819ஜனாதிபதி ஆட்சி
71984பிவந்தி146காங்கிரஸ்வசந்ததா பட்டில்
81984டில்லி2733காங்கிரஸ் (யூனியன் பிரதேசம்)-
91985அகமதாபாத்300காங்கிரஸ்எம்.எஸ்.சோலன்கி
101989பகல்பூர்1161காங்கிரஸ்எஸ்.என்.சிங்
111990டில்லி100யூனியன் பிரதேசம்
121990ஹைதராபாத்365காங்கிரஸ்சென்னா ரெட்டி
131990அலிகர்150ஜனதாதளம்முலாயம் சிங்
141992சூரத்152காங் + ஜனதா தளம்சிமன்பாய் படேல்
151992கான்பூர்254ஜனாதிபதி ஆட்சி
161992போபால்143ஜனாதிபதி ஆட்சி
171993மும்பை872காங்கிரஸ்சுதாகர் ராவ் நாயக்
182002குஜராத்1267பி.ஜே.பி.நரேந்திர மோடி



மன்னித்து கொள்ளுங்கள் ,நான் பேரரசன் ஆக விரும்பவில்லை அது என் வேலை அல்ல நான் யாரையும் ஆளவோ வெற்றி கொள்ளவே விரும்ப வில்லை முடிந்தால் அனைவருக்கும் உதவி செய்ய விரும்புகிறேன்,யூதர் கருப்பினத்தவர்,வெள்ளையினத்தவர் உதவவே விரும்புகிறேன் . நநாம் எல்லோரும் ஒருவருக்கு ஒருவர் உதவி செய்து கொள்ள வேண்டும் ஏன் என்றால் நாம் மனிதர்கள் ,இங்கு ஒருவர் அடுத்தவர் மகிழ்ச்சியை ஆதாரம் ஆக கொண்டு தான் வாழ வேண்டும் துன்பத்தை ஆதாரம் ஆக கொண்டு அல்ல .நாம் ஒருவரை ஒருவர் வெறுக்க வேண்டியது இல்லை ,இந்த உலகில் எல்லோருக்கும் இடம் இருக்கிறது என்றார் சக மனிதன் மனிதம் மீதான அன்பை காலம் எல்லாம் தன் படைப்பு வழி சொன்ன சார்லி சாப்ளின் .

ஆனால் நாம் எல்லோரும் நமது மதத்தை விட்டு கொடுக்க தயார் இல்லை ,எனது இறைவன் ஏக இறைவன் .எனது மார்க்கம் மட்டுமே உண்மையான மதம் /மார்கம் என்று எண்ணி கொண்டு தான் வாழ்கிறோம் ,என்ன ஓன்று அடிப்டை வாதிகள் தாங்கள் இறைவன் தான் உண்மையானவன் என்று மத கலவரம் மூலம் அடிக்கடி நிருபிக்கின்றனர்.அனால் சாதரண மனிதர்கள் என்று சொல்ல படுவோர் அதை நிருபிக்க வில்லை ,ஆனாலும் தங்கள் மதம் உண்மை இல்லை என்பதை எந்த மத மக்களும் ஏற்று கொள்ள மாட்டார்கள் . மனிதன் உண்டாக்கிய மதம் மனிதனை பிரித்து வைக்கவே பயன்படுகிறது ,உன்னையும் என்னையும்  இந்து ,கிறிஸ்தவன் ,முஸ்லீம் ,சீக் ,புத்தம் என்று பிரித்து வைத்தது இந்த மத அமைப்பு தானே ,இன்று வரை எனறாவது நாம் கேள்வி கேட்டு இருக்கிறோமா ? மனிதர்கள் ஆக அடையாள படுத்த பட வேண்டிய நாம்  நாம் ஏன்மதங்களால் பிரிந்து அடையாள படுத்த படுகிறோம் என்று .

இங்கு எல்லோருக்கும் இல்லாத ஒருவன் தேவை பட்டு கொண்டு இருக்கிறான் மனிதம் இருந்து விட்டால் இல்லாத ஒருவன் துணை நமக்கு தேவை இல்லை ,நமது எல்லா நேரத்திலும் உடன் வர சக மனிதம் உள்ள மனிதன் இருப்பான் ,ஆனால் இங்கு அப்படி இல்லையே ,யார் கடவுள் உண்மையானவன் என்ற போட்டி தொடர்ந்து நடைபெற்று கொண்டே வருகிறது ,மத அடிப்படை நாடுகள் அமைய வேண்டும் என்ற குரல் தான் ஓங்கி ஒலிக்கிறதே தவிர  மனிதம் அடிப்படையான நாடுகள் அமைப்போம் என்று குரல் ஒலிக்கவில்லை இங்கு .


இங்கு எல்லா மதமும் ஓன்று தான் என்று சொல்ல பட்டாலும் அது உண்மை இல்லை ,மிக சிறந்த உதாரணம் திருமணம் ,ஆணும் பெண்ணும் இயல்பாக இணையும் நிகழ்வு ,இந்த நிகழ்வில் வேறு வேறு மதம் சார்ந்த இருவர் திருமணம் செய்ய வேண்டும் என்றால் ஒருவர் ஆவது அடுத்தவர் மதத்திற்கு மதம் மாறி தான் திருமணம் செய்ய முடியும் .அது கூட சுலபம் இல்லை ,எப்படி சாதி தூய்மை எல்லா சாதி மக்கள் கலப்பு மூலம் கெட்டு விடும் என்று எண்ணும் சாதி வெறியர்கள் போல தான் மத வெறியர்களும் மத தூய்மை கெட்டு விட கூடாது என்பதில் உறுதியாக இருகின்றனர் .இதற்கு விதி விலக்காக சில குடும்பங்கள் மொத்த தேசத்திலும் இருக்கலாம் மீதி உள்ள அத்தனை மத நம்பிக்கை ஆளர்களும் மதம் இல்லாமல் போய் விட கூடாது என்றும் அதனால் மனங்கள் இணைய கூடாது  என்று அரிவாள் உடன் இடையே நிற்கின்றனர் ,எப்படி சாதி எதிர்த்து மணம் புரிவோர் சாதி வெறியர்களால் கொல்லபடுகிறார்களோ அது போல மதம் எதிர்த்து மணம் செய்வோரும் கொல்ல படுகின்றனர் .



எல்லா மத கலவரத்திலும் ஆண் என்பவன் தனது ஆண்மையை  பெண்களை வன்புணர்வு செய்வதன் மூலம் தொடந்து நிரூபிக்க பட்டு கொண்டே வருகிறான் ,பெண்களை வன்புணர்வு செய்வது ஆண்மையா ?மத கலவரம் மூலம் அதிகம் பாதிக்க படுவது சாதரண மக்களும் பெண்களும் தான் .ஆனால் மதம் உடன் அதிகம் பிணைக்க பட்டுள்ளதும் சாதரண மக்களும் பெண்களும் தான்.அவர்கள் முடிவு இல்லாமல் இருக்கிறான் என்று தொடந்து வழிபடும் சர்வ வல்லமை நிறைந்த இறைவன் அவர்கள் கதறும் போது எங்கு போய் இருப்பான் என்று தான் இன்றுவரை தெரியவில்லை .இறைவனை காண வில்லை என்று விளம்பரம் கொடுக்க வேண்டும் .ஆனாலும் மக்கள் இன்றுவரை ஓன்றும் செயல்படாமல் கல்லாய் உருவம் இல்லாதவனாய் இருப்பவனை  விட்டுவிட தயார் இல்லை ,மதம் இல்லாமல் ஆக்க யாரும் தயார் இல்லை ,மதம் இறைவன் இருப்பதால் தானே மத கலவரம் நடக்கிறது .மதம் இருக்கும் வரை மதத்தினால் கலவரம் நிகழ்ந்து கொண்டே இருக்கும் .பெண்களும் சாதரண மக்களும் கொடுமை படுத்த பட்டு கொண்டு தான் இருப்பார் .....மதத்திற்கு முடிவு இல்லை என்றல் மத கலவரத்திற்கும்  முடிவு இல்லை 

மதம் இல்லா உலகு மனிதம் சூழ் உலகு அழகானது ..........................


செவ்வாய், 15 ஏப்ரல், 2014

வானம் வசப்படட்டும்



இன்று வாழ்வின் சக தோழிகள் ஆன திருநங்கைகள் தினம் .

பெயர்காரணம்: 

திருநங்கை என்று அழைக்க படும் தோழிகள் பிறப்பால் ஆண் என்று அடையாள படுத்த பட்டு பின் தன்னை பெண்ணாக உணர்ந்து வாழ முற்படுவரை குறிக்கும் சொல்லாக இன்று பயன் படுகிறது .

திருநங்கைகள் தினம் தொடங்கிய விதம்: 

உலகம் முழுவதும் சமத்துவம் ,விடுதலை ,சகோதரத்துவம் வேண்டி பல்வேறு விழாக்கள் கொண்டாட படுகிறது ,அப்படி திருங்கைகளின் சமத்துவம் சம உரிமை ,சம வாய்ப்பு இவை போல  மற்றும் பல உரிமை வேண்டி 2008ஆண்டு அரவாணிகள் நலவாரியம் தோற்றுவிக்க பட்டது தமிழ்நாட்டில்.ஏப்ரல் 15ம் தேதி ,அதே  தினத்தை தமிழக அரசு அரசாணை மூலம் 2011ம் அண்டு முதல் திருநங்கை தினம் ஆக அறிவித்தது .அன்று முதல் தமிழ் நாட்டில் திருநங்கைகள் தினம் கடை பிடிக்க படுகிறது .



சமூக நோக்கில் திருநங்கைகள் : 

இன்றைய காலத்தில் திருநங்கைகள் பற்றி ஒரு அளவு புரிதல் ஏற்பட்டு இருப்பது ஆரோக்கியமான சூழ்நிலை என்றாலும் மிக அதிக இடங்களில் இன்னும் திருநங்கைகள் 
கேவல படுத்தபட்டு ஒடுக்க பட்டே வருகின்றனர் என்பது கண்கூடு.திருங்கைகள் குறித்த புரிதல் நமது வீடுகளில் இருந்து தொடங்கி ஆக வேண்டும் ,வீடுகள் முதலில் ஏற்றால் தான் சமூகம் ஏற்க்கும் .ஆனால் மிக பெரும்பான்மையாக குடும்பங்கள் நிராகரிக்கின்றன்ர்  .அதனால் பெற்றவர் உறவினர் பிரிந்து கண்ணீர் விடும் திருநங்கைகள் இன்று ஏராளம். குடும்ப அரவணைப்பு அவர்கள் முன்னேற்றத்திற்கு வழி செய்யும், இதனால்  திருநங்கைகள் தங்கள் வாழ்வில் சிறந்த இடம் அடைய முயற்சித்து வெற்றி பெறுவர்.பெற்றவருக்கு எல்லோரும் பிள்ளைகள் தானே .அந்த எண்ணம் எல்லா பெற்றவர்களிடம் வந்தாக வேண்டும் .உறவுகளும் மதிக்க வேண்டும் .

முழு சமூக அங்கீகாரம் இன்னும் கிடைக்காத நிலையிலும் கலைத்துறை ,எழுத்து துறை ,ஊடகம் மற்றும் சமூக பணி ,சொந்த தொழில் செய்து வந்தாலும் பெரும்பாலான திருநங்கைகள் பாலியல் தொழில் அல்லது கடை கேட்டல் என்னும் நிலைக்கு தள்ள பட்டுள்ளதே இன்று காண கிடைப்பது. பாலியல் அடையாள சிக்கல் காரணம் ஆக இவர்களுக்கு எந்த ஒரு சமூக நீதியும் இங்கு நடப்பாக்கவில்லை இந்த தேசம் .இப்படி செய்து விட்டு இந்த சமூகம் திருநங்கைகளை குறை வேறு சொல்கிறது ,தவறை தன் மேல் வைத்து கொண்டு தான் ஒடுக்கும் இனத்தின் மீது தவறை சமைக்கும் கேவல எண்ணத்தின் வெளிப்பாடு தான் இந்த பாலின ஒடுக்குமுறை .



இனி செய்ய வேண்டியவை:

 நெடும் காலமாக புறக்கணிக்க பட்டு வந்த சமூகம் ஆன திருங்கைகளுக்கு வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு செய்து தார வேண்டும்,அது போல் தனியார் துறையிலும் திருநங்கைகள் பணிவாய்ப்பு அளிக்க பட வேண்டும் ,வேலை செய்யும் இடங்களில் பாலின வேற்றுமை களைய பட வேண்டும் இது தான் முக்கியம் திருநங்கைகள் வாழ்வை முன்னேற்றம் 
செய்ய வேண்டிய முக்கிய பணியாகும் .  பல்வேறு வெளிநாட்டு நிறுவனம் பல நாடுகளில் திருநங்கைகளை பணி வாய்ப்பு வழங்கி இருக்கிறது,இந்தியாவில் அந்த நிலைமை வர வேண்டும் .




ஊடகம் எப்போதும் திருநங்கைகளை மிக கேவலமாக சித்தரிப்பு செய்தே வருகிறது ,பெண்களை போக பொருள் போல் சித்தரிப்பு செய்யும் ஊடகம் திருங்கைகளை கேவலமாக சித்தரிப்பு செய்வதில் வியப்பு இல்லை என்றாலும் சமத்துவம் வேண்டி போராடும் எல்லோரும் இவ்விடயத்தில் ஒன்றாக வேண்டியதும்  எதிர்க்க வேண்டியதும் அவசியம் . 

இதுவரை கனடா நாட்டில் மட்டுமே திருநங்கைகள் எல்லா உரிமையும் பெற்று சமத்துவ வாழ்க்கை வாழுகின்றனர் ,அந்த நிலமை நமது தேசத்தில் வர உறுதி எடுக்க பட வேண்டும் .




என் தெரிந்த அளவில் சமூக போரட்டம் செய்யும் திருநங்கைகள் 

1.கல்கி சுபிரமணியன் 

சகோதரி அமைப்பின் நிறுவனர் .தன் வாழ்வை போராட்டத்தை லிவிங் ஸ்மைல் வித்யா என்ற நூல் மூலம் சமூகத்துக்கு சொன்ன எழுத்தாளர் மற்றும் திரைப்பட இயக்குனர்,நடிகை ,திருநங்கைகளுக்கு கல்வி வேலை வாய்ப்பில் 3 சதவீத இட ஒதுக்கீடு வேண்டி வழக்கு பதிவு செய்தவரில் ஒருவர்  .சமூக போராளி 

2.ரோஸ் வெங்கடேசன் 

விஜய் தொலைகாட்சி இப்படிக்கு ரோஸ் நிகழ்வை தொகுத்து வழங்கியவர் ,பாப் ஆல்பமும் வெளியிட்டு உள்ளார் .

3.ரேவதி 

மிக சிறந்த எழுத்தாளர் ,திருங்கைகளை பற்றி உணர்வும் உருவகமும் என்ற நூலை எழுதி உள்ளார் .சமூக போராளி 

4.பிரியா பாபு 

கண்ணாடி அமைப்பின் நிறுவனர் மற்றும் மிக சிறந்த சமூக போராளி 

5.நர்த்தகி நடராஜ் 

பிரபல பரத நாட்டிய கலைஞர்,முதல் பெண் என்று  இந்திய கடவு சீட்டு பெற்ற முதல் நபர் .பல்வேறு விருதுகளுக்கு சொந்தகாரர் .   

6.பாரதி கண்ணம்மா 

தனது பாரதி கண்ணம்மா அமைப்பு மூலம் திருநங்கைகள் பொருளாதரம் உயர வேண்டி போராடும் சமூக போராளி ,மதுரையின் சுயேட்சை வேட்பாளர் (எம் பி ஏலக்சன் )

7.சுவப்னா கார்த்திக் 

அருமை தங்கை மிக சிறந்த சமூக போராளி,மதுரையின் எல்லா மக்கள் நல போராட்டத்திலும் உடன் நிற்கும் சகோதரி .தேர்வு எழுதும் உரிமையை போராடி பெற்று முதல் வகுப்பில் தேர்வு செய்ய பட்ட அன்பு தங்கை ,மாவட்ட ஆட்சியர் ஆவர் என்று எதிர்பார்க்க படுகிறவள் .

சமத்துவம் வேண்டி நாம் திருநங்கைகள் உடன் நிற்போம் ,சமத்துவம் படைப்போம் ,இந்நாள் அதை நமக்கு சொல்லவே ஏற்படுத்த பட்ட பொன்நாள் . 

சனி, 12 ஏப்ரல், 2014

வரலாறை உருவாக்கியவர்


மனித குலத்தின் பெரும்பான்மைக்ககாக பாடுபட கூடிய ஒரு செயலை செய்ய நாம் தீர்மானம் செய்து கொண்டால் எவளவு பெரிய சுமையும் நமை வளைத்து விடாது  காரணம் நாம் செய்யும் அந்த செயல் இந்த பெரிய மனித குலத்தின் மீட்பிற்கு வேண்டி இருக்கிறபடியால் .அதனால் நமக்கு கிடைக்கும் மகிழ்வு முடிவு இல்லாததும் அகங்காரம் அற்றதும் ஆகும்.அந்த மகிழ்வு இந்தமொத்தமக்கள் திரளின்  மகிழ்வு ஆகும் ,அப்படி இந்த மொத்த மக்கள் திரளின் மகிழ்வு சமத்துவம் வேண்டி தன் வாழ்நாள் எல்லாம்  உழைத்த மாபெரும் புரட்சியாளர் இந்தியாவின் ஒரு முகம் அண்ணல் அம்பேத்கர் பிறந்த தினம் இன்று (14-04-1891)

பிறப்பு :

இன்றைய மத்தியபிரதேசத்தில் உள்ள "மாவ் " என்னும் ஊரில் ராம்ஜீ மாலோஜி சக்பாலுக்கும் 
பீமாபாயிக்கும் பதிநான்காவது  குழந்தையாக 11-04-1989 அன்று அண்ணல் பிறந்தார் .அவர் தந்தை ராணுவ பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணி செய்து கொண்டு இருந்தார் .

இளமையும் கல்வியும் :

தாழ்த்த பட்ட சாதிகளில் ஒன்றான மகர் சாதியில் பிறந்ததினால்  சிறு வயது முதலே சாதி இந்துகளின் கொடுமைகளை அனுபவித்தார் .1900 ஆண்டில் சத்ராவில் தனது தொடக்க கல்வி பயின்றார் ,அங்கு தாழ்த்த பட்ட மாணவர்கள் தனியே அமர வேண்டும் அவர்கள் யார் உடனும் பேச விளையாட கூடாது .அவர்கள் புத்தகம் குறிப்பேடு ஆகியவற்றை யாரும் தொட மாட்டார்கள் ,கேள்வி கேட்க கூடாது .தரையில் அமர கோணி பை வீட்டில் இருந்து கொண்டு வர வேண்டும் ,தண்ணீர் குடிக்க யாராவது ஊற்றினால் மட்டுமே கையால் தண்ணீரை ஏந்தி குடிக்க வேண்டும் ,வடமொழி கற்க தடை ,மாட்டு வண்டியில் பயணம் செய்யும் பொது தாழ்ந்த சாதி என்று சொல்லி குப்பை கொட்டுவது போல் ரோட்டில் வண்டியில் இருந்து அண்ணலையும் அவர் அண்ணனையும்  கொட்டியது ,இப்படி பல்வேறு கொடுமைகள்,அந்த பிஞ்சு மனதில் தன்னை போல் ஒடுக்க படும் கோடான கோடி மக்களுக்காக போராட வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட வைத்தது .இப்படி பல கொடுமைகள் நடந்தாலும் மகாதேவ் அம்பேத்கர்  என்ற பிராமண ஆசிரியர் அண்ணல் மேல் அன்பும் அக்கறையும் எடுத்து கவனித்து கொண்ட படியால் தன் பெயரில் அம்பேத்கர் என்ற தனது பிரமாண ஆசிரியர் பெயரை இணைத்து கொண்டார் அண்ணல் ..


1904 ஆண்டு மும்பையில் குடியேறியது அம்பேத்கர் அவர்களின் குடும்பம் அங்கு எல்பின்ஸ்டன் உயர்நிலை பள்ளியில் தனது கல்வியை தொடர்ந்தார் அண்ணல் .தாழ்த்த பட்ட சாதியை சேர்ந்தவர் என்பதால் சாதி இந்து மாணவர்களாலும் ஆசிரியர்களாலும் மிக்க மனவேதனை அடைந்தார் .ஆனாலும் 1907 ஆண்டு நடந்த மெட்ரிக் தேர்வில்  வெற்றி பெற்றதன் மூலம் தாழ்த்த பட்ட சாதியை சேர்ந்த முதல் மாணவர் என்ற பெருமையை பெருமையை பெற்றார் .அர்ஜீன் கோலுஸ்கர் என்ற ஆசிரியர் அண்ணலை பாராட்டி  புத்தரின் வாழ்க்கை வரலாறு என்ற புத்தகத்தை பரிசளித்தார் ,அந்த புத்தகம் தான் அண்ணலின் பின்நாள் சிந்தனை புரட்சியின் அடித்தளம் .




1908இல் ராமாபாய் அவர்கள் உடன் அண்ணல் திருமணம் நடைபெற்றது .அதன் பின் அண்ணல் கல்லூரி படிக்க பரோடா மன்னர் உதவி செய்ததால் மும்பையில் உள்ள எல்பின்ஸ்டன் கல்லூரியில் சேர்த்தார் .அங்கும் சாதி கொடுமைகள் தொடர்ந்தாலும் பேராசிரியர் முல்லர் என்பவர் அன்பும் அரவணைப்பும் அண்ணலுக்கு கிட்டியது .1912 பொருளாதரம் மற்றும் அரசியலில் பட்டம் பெற்ற பின் ஏற்கனவே அளித்து இருந்த வாக்குறுதி படி பரோடா மன்னர் அரசில் பணியில் சேர்ந்தார் .அங்கும் சாதி கொடுமை தொடந்தது ,ஆனாலும் அவர் அறிவு பசி அடங்க வில்லை அடுத்த  ஆண்டு உதவி தொகை பெற்று அமெரிக்கா சென்று பொருளாதரத்தில் எம் ஏ பட்டம் 1915 பெற்றார்.இந்திய லாபபங்கு ஒரு வரலாற்று பகுப்பாய்வு என்ற ஆய்வுக்கு அண்ணலுக்கு கொலம்பிய பல்கலை கழகம் டாக்டர் பட்டம் வழங்கி சிறப்பு செய்தது,அடுத்து 1921 ஆண்டு பிரிட்டிஷ் இந்தியாவில் அரசு நிதியை பரவல் ஆக்குதல் என்ற ஆய்வுக்கு முது அறிவியல் பட்டமும் 1923 ஆண்டு ரூபாயின் பிரச்னை என்ற ஆய்வுக்கு டி எஸ் ஈ பட்டமும் பெற்றார் .

அரசியல் மற்றும் சமூக பணிகள் .

மக்கள் பயன் அடையும் விதமாக பீப்பிள் எடிகேசன் சொசைட்டி என்ற அமைப்பை நிறுவி உயர்நிலை பள்ளி ,தொழிற்கல்லூரி ,கலை கல்லூரி ஏற்பட வழி செய்தார் .சட்டமன்றம் மற்றும் பாராளுமன்றம் வழிமுறைகளை  பயில எதிர்கால பிரதிநிதிகளுக்காக ஒரு கல்லூரி தோற்றுவித்தார் . அண்ணலின் கல்வி மற்றும் புத்தக வாசிப்பு ,வெளிநாட்டு பயணம் அவர் சிந்தனையில் ஆதிக்கம் செலுத்தின .பரோடா சமஸ்தானத்தின் முதலீட்டு ஆலோசகர் ஆகவும் ராணுவ செயலர் ஆகவும் சிறிது காலம் பணி செய்து விட்டு பின் மும்பையில் உள்ள கல்லூரியில் பொருளியல் பேரசிரியர் ஆக பணி செய்தார் .அவரால் தொடர்ந்து ஒரு இடத்திலும்  நிலையாய் இருக்க முடிவதில்லை காரணம் சாதி அடுக்குமுறையின் கோரங்கள்  அதனால் தான் அண்ணல் அந்த சாதியை களைய ஒடுக்க பட்ட மக்களுக்காக தன் வாழ்நாள் எல்லாம் போரடினார் .

1919 அரசியல் அமைப்பை ஆய்வு செய்ய ஆங்கில அரசு சௌத்பாரோ கமிட்டி நியமனம் செய்தது .அதில் அண்ணலும் ஆங்கில அரசால் அழைக்க பட்டு இருந்தார் .தாழ்த்த பட்ட மக்களுக்கு தனி தொகுதி முறை தேவை என்று உரத்து தன் குரலை பதிவு செய்தார் .தாழ்த்த பட்ட மக்கள் நலன் வேண்டி "மூக் நாயக் " பத்திரிக்கை ஏற்படுத்தி பணி செய்தார் .1920 இல் அரசியலில் நுழைந்தார் .கூட்டம் ,மாநாடு மூலம் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார் .ஒதுக்க பட்ட பாரதம்  பத்திரிக்கையும் நடத்தினார் .1924 ஒடுக்க பட்ட மக்களின் முன்னேற்றம் வேண்டி "பகிஸ்கிருத கிதாகரணி சபா " என்ற அமைப்பை நிறுவி கல்வி மற்றும் சமூக முன்னேற்றம் வேண்டி போராடினர் .1927இல் சவ்தார் குளம் நீர் எடுக்கும் போரட்டம் மற்றும் கலாரம் கோயில் நுழைவு போரட்டம் நடத்தி வெற்றி கண்டார் .1928இல் பம்பாய் சட்ட பேரவைக்கு தேர்வு செய்ய பட்டார் அப்போது சிறுபிள்ளை கல்வி ,தாய்மார்களின் மகப்பேறு காலஉதவி ,விவசாய தொழிலாளர் ஊதியம் போன்றவற்றை ஏற்படுத்தினார். விவசாய அடிமை முறை ஒழிப்பு ,தீண்டாமை எதிரான சட்டம்,தொழிலாளர் எட்டு மணி நேர வேலை ,அவசர கால ,ஓய்வு கால உதவி போன்றவற்றை நடைமுறை படுத்தினார் .  1930 லண்டன் வட்ட மேசை மாநாடு கிளம்பும் முன் என் மக்களின் உரிமைக்காக குரல் கொடுப்பேன் அதேபோல் சுயராஜ்யம் வேண்டியும் போரடுவேன் என்றார் .தாழ்த்த பட்ட அனைத்து சாதிகளும் ஒன்றிணைய வேண்டிய அவசரத்தை உணர்த்தினார் ஆனால் அண்ணலின் எண்ணம் இன்று வரை நிறைவேற வில்லை .

இரண்டாம் வட்ட மேசை மாநாடும் பூனா உடன்படிக்கையும் .

இரண்டாம் வட்ட மேசை மாநாடு லண்டனில் நடை பெற்றது .அங்கு தாழ்த்த பட்ட மக்களின் சார்பாக அம்பேத்கருக்கு அழைப்பு விடுக்க பட்டது அங்கு தாழ்த்த பட்டவர்களுக்கு தனி வாக்குரிமை ,விகிதாசாரா பிரதிநிதித்துவம் இரண்டும் வேண்டி அண்ணல் குரல் கொடுத்தார் .ஆனால் மகாத்மா காந்தி தனி வாக்குரிமை (தாழ்த்த பட்ட மக்களுக்கான தொகுதியில் தாழ்த்த பட்ட மக்கள் மட்டுமே வாக்கு செலுத்த இயலும் )கடுமையாக எதிர்த்தார் .ஆங்கில அரசு அண்ணல் கேட்ட உரிமை வழங்கியது ,இதை எதிர்த்து காந்தி உண்ணாவிரதம் இருந்த படியால் எரவாடா சிறையில் அடைக்க பட்டார் இதனால் நாட்டில் குழப்பம் நேர்ந்தது .நிறைய தலைவர்கள் அண்ணல் உடன் பேசியதன் விளைவாக அண்ணல் மாகத்மா காந்தியை சந்தித்து பேசி 19321 செப்டம்பர் 24 அன்று பூனா ஒப்பந்தம் கை எழுத்து ஆனது இதன் விளைவாக தாழ்த்த பட்ட மக்களுக்கு தனி தொகுதிகள் ஒதுக்க படும் அதில் எல்லா மக்களும் வாக்கு செலுத்தலாம் என்று முடிவு செய்ய பட்டது .இந்த நிகழ்வால் மனம் வெதும்பிய அண்ணல் காந்தியை மிக கடுமையாக விமர்சித்தார் "காந்திஜி உண்ணாவிரதம்கடுமையான ஆயுதம் தான் ஆனால் அதை அடிக்கடி கையில் எடுக்க வேண்டாம் ,ஆயுதம் மழுங்கி விடும் நீங்களும்  இருக்க மாட்டீர்கள், நீங்கள் இந்த தேசத்திற்கு தேவை படலாம்.மேலும் காந்தியை துறவி என்றும் மகாத்மா என்றும் அழைக்காதீர்கள் அவர் ஒரு சந்தர்ப்ப அரசியல்வாதி ,சீசனுக்கு சீசன் அவர் குணம் ஆதரவு மாறும் ஆனல் தலித் எனது மதத்தில் அடிமையாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் என்றும் மாறாது  என்றார் .இன்றும் அண்ணலையும் மகாத்மாவையும் எதிர் எதிர் நிறுத்தி காந்தியை துரோகி என்று விமர்சனம் நடை பெறுகிறது ஆனால் முதல் சட்ட அமைச்சர் ஆன அண்ணல் தனி வாக்குரிமை கோரவே இல்லை மேலும் ஏற்கனவே இருந்த முஸ்லிம் மற்றும் சீக்கிய தனி வாக்குரிமை  தடை செய்து சட்டம்  இயற்றி அதன் காரணத்தை விளக்கி அரசியல் நிர்ணய குழுவில்  உரையாற்றினார்  ,இதுவே நகை முரண் .

இந்திய அரசியல் அமைப்பு மற்றும் ரிசர்வ் வங்கி உருவாக்கியதில் பங்கு 

இந்திய சுதந்திரம் அடைந்த பின் நம் நாட்டை வழி நடத்த புதிய அரசியல் அமைப்பு சட்டம் உருவாக்கும் குழுவுக்கு மிக சிறந்த அறிவாளி ஆன அண்ணல் நேரு மற்றும் காந்தியின் எண்ணத்தின் பேரில் நியமனம் செய்ய பட்டார் .உடன் நியமிக்க பட்ட வரைவு குழுவின் உறுப்பினர் பின் வாங்கினாலும் கையால் முழுவதும் எழுத பட்ட உலகின் சிறந்த அரசியல் அமைப்பு சட்டத்தை உருவாக்கி தந்தார் அண்ணல். 26 நவமபர் 1949ல் அரசியல் நிர்ணய சபையால் ஏற்று கொள்ள பட்டது .தாழ்த்த பட்ட சாதிகள் ,பழங்குடிகள் ஆகியோருக்கு அரசு வேலை கல்வி இடஒதுக்கீடு கொண்டு வந்து சம தர்ம சமூகம் உருவாக வலி செய்தார் .மேலும் இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர் ஆகவும் நியமனம் செய்யபட்டு சிறப்பாக  பட்டார் ,அண்ணல் அவர்களால் எழுத பட்ட அரசியல் சாசனம் மிக சிறந்த சமூக ஆவணம் என்று இன்று வரலாற்று ஆசிரியர்கள் புகழ்கின்றனர் .இந்து நெறியியல் சட்டத்தை ஏற்படுத்த நேரு கால தாமதம் எடுத்து கொண்டதால் ஏற்பட்ட கருத்து வேறு பாட்டால் சட்ட அமைச்சர் பொறுப்பில் இருந்து விலகினார் ,ஆனாலும் நேரும் சட்டத்தை தனி தனியாக உடைத்து நிறைவேற்றினார்  ,அண்ணல் எதிர் கட்சியில் அமர்ந்து இதை எல்லாம் பார்த்து கொண்டு இருந்தார் .அண்ணல் பதவி விலகினாலும்  தாழ்த்த பட்ட ஒடுக்க பட்ட மக்களுக்காக தொடர்ந்து நாடாளுமன்றம் உள்ளும் வெளியே சமூகத்திலும் போராடினார் .

அண்ணல் 1921 ஆண்டு வரை தொழில் முறை பொருளாதர நிபுணர் ஆக பணி செய்த போது பொருளாதாரம் குறித்து மூன்று புத்தகங்களை எழுதினார் .

1.கிழக்கிந்திய கம்பெனி நிர்வாகம் மற்றும் நிதியும் 
2.பிரித்தானிய இந்தியாவின் மகாணங்களில் நிதியின் பரிமாணம் 
3.ரூபாயின் சிக்கல்கள் : மூலமும் தீர்வும் 

கில்டன் யங் ஆணையத்திடம் 1934இல் அண்ணல் கூறிய கருத்துகள் அடிப்படையில் தான் ரிசர்வ் வங்கி தோற்றுவிக்கபட்டது இந்தியாவில்   

இன்று இந்தியாவில் பல்வேறு தாழ்த்த பட்ட மக்கள் சமூக முன்னேற்றம் பெற அண்ணல் கொண்டு வந்த இட ஒதுக்கீடு முக்கியமானது ,அவராலே இன்று பலர் படித்து உள்ளனர் ,ஆனால் அண்ணல் தொடங்கி வைத்த போரட்டம் தொடர வில்லை என்பதும் இங்கு நிதர்சனமாய் இருக்கிறது 




யார் சூத்திரர்கள் ? சாதி ஒழிப்பு ,இந்துசியத்தின் தத்துவம் ஆகியவை அண்ணல் சாதிக்கு எதிராக எழுதிய  முக்கிய நூல்கள் .புத்த மதத்தின் கொள்கைகளால் கவரபட்டு எல்லா மக்களையும் பார்ப்பணிய இந்து மதத்தில் இருந்து வெளியேறி புத்த மதத்தில் இணைத்து சாதி இழிவு அகற்ற வழி சமைத்தார் .இலங்கையில் நடை பெற்ற புத்த சமய துறவிகள் அறிவு ஜீவிகள் மாநாட்டில் கலந்து கொண்டார். 1955 ஆண்டில் பாரதிய பௌத்த மகாசபை தோற்றுவித்தார். 1956 ஆண்டு புத்தரும் அவரின் தம்மும் என்ற புத்தகத்தை எழுதினார் .புத்தர் அல்லது காரல் மார்க்ஸ் என்ற புத்தகம் நிறைவு பெற வில்லை .நான் இந்துவாக பிறந்தேன் இந்துவாக மரிக்க மாட்டேன் என்று முன்பு அண்ணல் சொன்ன படி 1956  அக்டோபர் 26 இல் நாக்பூரில் விழா எடுத்து புத்த சமயம் மாறினார் .அவருடன் இலச்சகணக்கான மக்களும் புத்த மதம் மாறினார் .

இறுதி காலம் 

1948 இல் இருந்து அண்ணல் நீரழிவு நோயால் பாதிக்க பட்டு இருந்தார் அதன் காரணமாய் சாப்பிட்ட மருந்துகளால் கண் பார்வை குறைந்தது .1955 உடல்நிலை மேலும் மோசம் அடைந்தது .புத்தரும் அவரின் தம்மும் என்ற புத்தகத்தை எழுதிய 3 நாளுக்கு பிறகு 1956 டிசம்பர் 6 டெல்லியில் இரவு தூக்கத்தில் அண்ணல் உயிர் துறந்தார் .1990 இல் அண்ணலுக்கு இந்த தேசத்தின் மிக உயரிய விருதான பாரதரத்னா விருது வழங்க பட்டது .

ஒடுக்க பட்ட சமூகத்தில் பிறந்து இந்த தேசத்தின் விடுதலை அரசியல் சாசனத்தை வரைந்த மாபெரும் சட்ட மேதை பாபா சாகேப் டாக்டர் பி ஆர் அம்பேத்கர்  அரசியல் ,பொருளாதரம் ,சட்டம் என்ற அனைத்து துறையிலும் மேதை ஆக விளங்கினார் .இந்திய சாதியின் பழமை வாத ஒடுக்குமுறை பக்கங்களை கிழித்து எரிந்த மாமேதை அண்ணல் ,ஈடு இணையற்ற சமூக போராளி ,எல்லோருக்குமான ஆதர்ச பிம்பம் .அண்ணலை வாழ்கையில் ஏந்துவோம் .


இறுதியாக வரலாற்று ஆய்வாளர் ராமசந்திர குகா எழுதிய வரிகளோடு முடிப்பது சிறப்பாக இருக்கும் என்று நினைகிக்றேன். "திரைக்கதை எழுத்தாளருக்கும்   ஐதீகம் சமைப்பவருக்கு வேண்டும் என்றல் ஒரே ஒரு காதாநாயகன் தேவை படலாம் ,ஆனால் வரலாற்று ஆசிரியனுக்கு அத்தகைய கட்டு பாடுகள் இல்லை ,தலித் சுதந்திர போரட்ட வரலாறு என்பது இன்னமும் முடிவு பெறாததும் பெரும்பாலன பகுதிகள் இன்னும் எழுத படாத ஒன்றும் ஆகும் ,ஒன்றுக்கு மேற்பட்ட கதையின் நாயகர்கள் அதில் இருப்பார்கள் அதில் அண்ணலும் ,மாகாத்மாவும் மிக சிறப்பான தொடக்கம் ஆக அமைவர் அப்படி இந்த தேசத்தின் ஒரு கதாநாயகன் ஆகிய அண்ணல் பிறந்த நாள் இன்று