சனி, 14 ஜூன், 2014

தோழன்


பயணங்கள் ஒரு மனித வாழ்கையை மாற்றி அமைக்குமா என்றால் ஆம் என்று சொல்லாம் அந்த ஆம் என்ற சொல்லுக்கு உதாரணம் தான் "சே " உலகில் தோழன் என்று சொல்ல பட தகுதி படைத்த ஒரு மனிதன் உண்டு என்றால் அந்த போட்டியில் பெரும்பாலும் முதல் இடமும் "சே " இக்குதான் .

சே குவேரா  அல்லது சே என்று அறிய பட்ட எர்னஸ்டோ குவேரா டி லா செர்னோ அர்ஜென்டினாவில் ரொசாரியோ என்ற இடத்தில் 1928 ஜூன் 14 இல் பிறந்தார் .அவருக்கு சிறு வயதிலே ஆஸ்மா இருந்ததால்  எப்போதும் இருமி கொண்டே இருப்பார் .அவர் தொடக்க கல்வி அவரது பெற்றவர்களளே கொடுக்க பட்டது .சிறுவயதிலே அவருக்கு ஆஸ்மா இருந்தாலும் எல்லா குழந்தைகளையும் போல பணிகளை செய்ய  சே தவறவே இல்லை .சேவின் பெற்றோர் அவரை ஒரு தைரியசாலி ஆகவே வளர்த்தனர் .சொந்தமாக தேயிலை தோட்டம் இருக்கும் அளவுக்கு வசிதியான குடும்பம் சே உடையது .

சிறுவயதில் ரக்பி விளையாட்டிலும் செஸ் விளையாட்டிலும் சிறந்து விளங்கிய சே மிக சிறந்த வாசிப்பு பழக்கம் உள்ளவர் .அவர் வீட்டில் 3000 நூல்களுக்கு மேல் இருந்தது .மார்க்ஸ் ,போல்க்னர் ,கைடே,சல்காரி ,வேர்னே ,நேரு ,காப்கா ,காமுஸ் ,லெனின் ,பிரான்ஸ் ,ஏங்கல்ஸ்,வெல்ஸ் ,புரோஸ்ட் ஆகியவர்கள் எழுதிய நூல்களை விரும்பி வாசித்தார் சே . 

அவரது வயது அதிகரித்த போது அவருக்கு இலத்தீன் அமெரிக்க எழுத்தாளர்களான குயிரோகா ,அலெக்ரியா ,இக்கசா,டாரியோ,ஆஸ்டுரியஸ்  ஆகியவர் எழுத்திகளின் மேல் ஈடுபாடு ஏற்பட்டது .புத்தர் அரிஸ்டாட்டில் ரச்ஸல் ,சிக்மெண்ட் பிராய்ட்,நீசே இவர்களின் புத்தகங்களில் தனது கருத்தையும் எழுதி வைத்தார் சே .  

மருத்துவம் படித்து ஏழைகளுக்கு தொண்டு செய்ய வேண்டும் என்று எண்ணிய சே மருத்தவம் படிக்க சேர்ந்தார் "புவனஸ் அயர்ஸ் " பல்கலைகழகத்தில் .ஒரு வருடம் படிப்பை நிறுத்தி விட்டு தனது நண்பன் அல்பர்டோ உடன் சேர்ந்து தென் அமெரிக்கா முழுவதும் மோட்டார் சைக்கிள் சுற்றி வந்தது அவர் வாழ்வை மாற்றி அமைத்தது .அந்த நேரத்தில் தென் அமெரிக்கா முழுவதும் தொழுநோய் பரவி இருந்தது .அவர் தனது இந்த பயணத்தில் எழுதிய குறிப்புகள் "மோட்டார் சைக்கிள் டயரி " என்ற நூல் ஆக வெளி வந்தது அதே பெயரில் திரைப்படம் ஆகவும் வெளி வந்து விருதுகளும் பெற்றது .

இந்த பயணத்தின் மூலம் தென் அமெரிக்க கண்டம் முழுவதும் பரவி இருந்த ஏழ்மை ,பிணி ,அறியாமை ,அடக்குமுறை ,வாக்குரிமை இல்லாமை ,வர்க்க வேறுபாடு இவை  எல்லாவற்றிகும் காரணம் முதலாளித்துவமும் அமெரிக்காவும் தான் என்று சே எண்ணினார் அந்த பிரச்னைக்கு தீர்வாக அவர் தெரிவு செய்தது மார்க்சியம் ,அந்த மார்க்சிய அரசை அமைக்க ஆயுத போராட்ட வழிமுறை ஒன்றே தீர்வு என்ற நிலைக்கு வந்தார் சே .பயணம் முடித்து அர்ஜென்டினா திரும்பிய சே மருத்தவ டிப்ளோமா பட்டம் பெற்றார் .

மீண்டும் தனது பயணத்தை தொடங்கிய சே இம்முறை பொலிவியா ,இக்வடேர்,பனாமா ,கொச்தரிகா,கெண்டுராஸ் எல்சல்வடோர் ,கவுதமாலா ஆகிய இடங்களுக்கு சென்றார் ,கவுதமாலாவில் மக்கள் ஆட்சி தெரிவு செய்த குடியரசு தலைவர் குஸ்மான் என்பவர் நில சீர்திருத்த முறையில் தனி நபர்களின் பெரும் பண்ணை முறையை ஒழிக்க முயற்சி செய்து கொண்டு இருந்தார் .அமெரிக்காவுக்கு அது பிடிக்க வில்லை உளவு அமைப்பான சி ஐ ஏ அந்த மக்கள் அரசை கவிழ்க்க தீவரமாக செயல் பட்டு கொண்டு இருந்தது .அப்போது சே அங்க தான் இருந்தார் . அங்கு தான் முதலில் சே ததனது மனைவி கில்டாவை சந்தித்தார் .இவர் இடது சாரி சிந்தனை கொண்ட அமெரிக்க மக்கள் புரட்சிகர கூட்டமைப்பின் உறுப்பினர் .இவர் மூலம் ஆக சே பல தலைவர்கள் உடன் நட்பு ஏற்பட்டது .சே கம்யுனிஸ்டுகளுடன் இணைந்து அமெரிக்காவுக்கு எதிராக செயல் பட தொடங்கினார் .ஆனால் கவுதமாலா அரசை அமெரிக்கா சதி செய்து கவிழ்த்தது .அப்போது சே இப்படி எழுதிகிறார் "விவசாயிகளிடம் ஆயுதம் கொடுத்து போரட்டத்தில் ஈடுபட செய்து இருந்தால் அரசு கவிழ்ந்து இருக்காது " என்று அன்றே  சி ஐ ஏ பார்வை சே மீது விழுகிறது ,அன்றில் இருந்து அவர் கொல்ல படும் வரை சி ஐ ஏ அவரை பின் தொடந்து  கொண்டே இருந்தது .

பாடிஸ்டா தலைமையில் இயங்கி கொண்டு இருந்த கியூபாவை விடுவிக்க பிடல் தலமையில் கொரில்லா போரட்டம்  நடந்து கொண்டு இருந்தது .ராணுவ தளம் மென்கடாவை தாக்கி ஆயுதம் கைப்பற்ற சூலை 26 புரட்சி நடந்தது அப்போது தான் .ஆனால்  இந்த போராட்டம் வெற்றி பெற வில்லை ,பிடல் மற்றும் அவர் தம்பி ரவுல் மற்றும் போராளிகள் கைது செய்ய பட்டனர் .15 வருடம் சிறை தண்டனை வழங்க பட்டது அப்போது வரலாற்று சிறப்பு மிக்க உரையான  "வரலாறு என்னை விடுதலை செய்யும் " என்ற உரை நிகழ்த்த பட்டது மருத்துவ மனையான நீதி மன்றத்தில் .அதன் பிறகு மக்கள் புரட்சியின் விளைவாக பிடல் மற்றும் தோழர்களுக்கு பொது மன்னிப்பு அழிக்க பட்டது . இந்த நேரத்தில் தான் பிடல் குழுவை சேர்ந்த லோபஸ் "சே" வை சந்திக்கிறார் கவுதமாலாவில் .இருவரின் கருத்தும் ஒத்து போகிறது சேவும் தங்கள் உடன் இணைய வேண்டி ரவுல் காஸ்ட்ரோ உடன் பேசுகிறார் லோபஸ் .கியூபா சுதந்திரம் ஜூலை மாதம் ஒரு நள் இரவில் சே -பிடல் சந்திப்பு மூலம் உறுதி செய்ய பட்டது .அப்போது சே இக்கு 27 இம் பிடலுக்கு 32 வயதும் தான் .

மூன்று ஆண்டுகள் தொடர்ச்சியான போரட்டம் விளைவாக 1958 கியூபா  தலைநகர் கவானாவுக்குள் நுழைந்து கியூபாவை போரட்ட குழு தன் வசம் ஆக்கியது .அந்த மாபெரும் வெற்றிக்கு பிறகு கியூபாவின் மகன் என்று சே பிடலால் முன் மொழிய பட்டார் .தேசிய வங்கி அதிபர் மற்றும் விவசாய துறை தேசிய தலைவர் என்ற பதவியில் அமர்ந்தார் சே .ரூபாய் நோட்டில் சே என்று கை எழுத்து இடும் அளவுக்கு சே வளர்ந்து இருந்தார் கியூபாவில் .ஆனால் சே என்றுமே தன்னை பெரியவன் என்று எண்ணி கொண்டது இல்லை  விவசாயிகள் உடன் இணைந்து கரும்பு வெட்டியும்  தொழிலாளர் உடன் இணைந்து மூட்டை தூக்கியும் வாழ்ந்தார் சே .ஆனால் சக மனிதன் மீதான அன்பு அவரை நிலை கொள்ள செய்யவில்லை கியூபாவில் . அமெரிக்காவில் சி பி என் தொலைகாட்சி அளித்த நேர்காணலில் அமெரிக்கா ஒரு கழுதை புலி அதன் ஏகாதிபதியத்தை வேரருப்பேன் என்று அமெரிக்க மண்ணில் இருந்து கொண்டு சே பேசினார் .சே கியூபாவின் குடியுரிமை மற்றும் எல்லா பதவியையும் துறந்து காங்கோ பயணித்தார் .சே பிடலுக்கு எழுதிய கடித்தில் கியூபா உடன் ஆன புரட்சி தொட்பான கடமை முடிந்து விட்டதால் மற்ற நாடுகளில் புரட்சி ஏற்படுத்த தாம் கியூபா மண்ணை மக்களை விட்டு பிரிவதாக எழுதி இருந்தார் .ஆனால் அந்த நொடி ஒரு மிக பெரிய வீரனின் வாழ்கை முடிவுக்கு நாள் குறிக்க பட்டது 

கொரில்லா போரை வழி நடத்தும் நோக்குடன் பொலிவிய பயணம் ஆனார் போலி பாஸ்போட் உடன் .அமெரிக்காவின் பார்வை பொலிவியா மீது அத்துணை அழுத்தம் ஆக இல்லாததாலும் பொலிவியாவின்  ஏழ்மை புரட்சியை தோற்றுவிக்கும் என்று "சே" நம்பியதாலும் அங்கு கொரில்லா போராட்டம் வெற்றி பெற்றால் எல்லா நாடுகளுக்கும் பரவும் என்று "சே" எண்ணினார் .ஆனால் அவர் எதிர்பார்ப்பு வெற்றி பெற வில்லை ,அங்கு நடந்த போராட்டம் தோல்வியை தழுவியது."சே" வை தேடி  சி ஐ ஏ பொலுவிய காடுகளில் நுழைந்து தேடுதல் வேட்டை நிகழ்த்தியது .

தோழர்கள் உடன் யுரோ கணவாயை கடந்து செல்லும் போது வழியில் கண்ட ஆடு மேய்க்கும் ஏழை பெண்ணுக்கு 50 பேசொக்களை தருகிறார் ,அந்த பெண் தான் சே வை காட்டி கொடுக்கிறார் .சி ஐ ஏ அவரை சுற்றி வளைத்து கைது செய்து ஒரு பள்ளிகூடத்தில் வைக்கிறது ,அந்த பள்ளியின் நிலை கண்டு வருந்துகிறார் சே .வாழ்வின் இறுதி நேரத்திலும் சக மனிதன் மீதான அன்பு சே வுக்கு குறையவே இல்லை .இறுதியாக  கோழையே நீ சுடு , நீ சுடுவது சே வை அல்ல ஒரு சாதாரண மனிதனை தான் என்ற இறுதி வாசகம் ஒலிக்க  சே சுட்டு கொல்ல படுகிறார் ,தேசம் இனம் ,மொழி என்ற எந்த பாகுபாடும் பார்க்காது சக மனிதன் மீது கொண்ட பாசத்தால் போராடிய போராளி இந்த மண்ணை விட்டு சென்றான் .

தன் மகத்தான வாழ்க்கையால் சக மனிதன் மீதான அன்பால் தன் வாழ்கையை சக மனிதர்கள் வேண்டி அர்ப்பணம் செய்ததன் மூலம்  கோடிக்காணக்கான மக்களை தன் வச படுத்தியவன் ,வரலாற்றில் என்றும் சேவின் பெயர் நிலைத்து நிற்கும் .ஏன் என்றால் அவன் உயிர் இந்த மண்ணில் இருந்து பிரிந்தது சக மனிதன் மீது கொண்ட அன்பால் மட்டுமே ,இந்த பேருலகை நேசித்த வரலாற்றின் தலைமகன் தான் சே .இப்போது நடக்கும் கொடுமை என்னவென்றால் எந்த முதலாளித்துவத்தை சே எதிர்த்தாரோ அந்த முதலாளித்துவம் அவரை சந்தை படுத்தி கொண்டு இருக்கிறது  அமெரிக்காவில் அங்கு அதிகம் விற்பனை ஆவது சே உருவ படம் பொறித்த டி ஷர்ட் தான் ,ஆனால் வாழ்கையில் சே வின் கொள்கைகள் எந்த அளவுக்கு பாதிப்பு ஏற்படுத்தி இருக்கிறது  என்பது மிக பெரும் கேள்வி தான் இன்று வரை .எது எப்படி இருந்தாலும் "சே "வரலாற்றின் தலைமகன் என்பதில் மாற்று கருத்து இல்லை  .......



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக